ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வாகனம் பாடா துரியன் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த வந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.